அத்திவெட்டி பாஸ்கரன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஆடலரசு ஆகியோரின் தாயார் இந்திராணி வைரவசுந்தரம் 18.2.2026 அன்று இரவு மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று மாலை 3 மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என கழகக் காப்பாளர் அத்திவெட்டி வீரையன் தெரிவித்துள்ளார்.
– – – – –

திருமதி லட்சுமியின் வாழ்விணையரும், க.மதிவாணன், நினைவில் க.இரவிச்சந்திரன், க.ரசியா ராணி, க.திராவிடமணி ஆகி யோரின் தந்தையுமான பெரியார் பெருந்தொண்டர் அம்மன்பேட்டை எம்.எஸ்.கலியபெருமாள் (வயது 95) 18.02.2026 அதிகாலை 1.00 மணியளவில் இயற்கையெய்தினார். இவர் தந்தை பெரியார், ஆசிரியர் ஆகியோரை அழைத்து சிறப்பாக கூட்டங்கள் நடத்தியவர். கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். பெரியார் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து, முழு ஒத்துழைப்பு நல்கி யவர். திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
