1996-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி – தமிழர் தலைவர் ஆசிரியருக்குத் தமிழ்நாடு அரசின் உயரிய விருதான “தந்தை பெரியார் சமூகநீதி விருது” வழங்கப்பட்ட சிறப்புமிக்க நாள் ஆகும்.
அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணிக்கு இந்த விருதை வழங்கினார்.
விருதின் சிறப்பு
மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்கம் தொடர்பான தீர்ப்பு காரணமாக தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, அதனைச் சட்டரீதியாக உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, 76-ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் 69% இட ஒதுக்கீடு சட்டம் சேர்க்கப்படுவதற்குத் தமிழர் தலைவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதற்கு சட்ட நுணுக்கப் பார்வையோடு ஆசிரியர் கூறிய ஆலோசனை பெரும் உந்துசக்தியாக இருந்து சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டது.
பெரியார் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும், சமூகநீதிப் போரில் சமரசமற்றப் போக்கைக் கடைப்பிடிப்பதிலும் ஆசிரியர் அவர்கள் காட்டிய தீவிரத்தை அங்கீ கரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப் பட்டதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
