எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஏற்பாடு

1 Min Read

சென்னை,ஏப். 16- எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-பி. குரூப்-சி பதவிகளில் 7,500 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட் டுள்ளது.

பட்டப் படிப்பு தரத்திலான இத்தேர்வுக்கு மே 3ஆம் தேதிக்குள் ஆன்லைனில் (<www.ssc.nic.in>) விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கு அனைத்து மாவட் டங்களிலும் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்களில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. மேலும், தேர்வுக்கான பாடத்திட்டம், பாடக்குறிப்புகள் <www.tamilnaducareerservices.tn.gov.in> என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்திலும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின்”AIM TN” என்ற யூடியூப் சேனலிலும் இத்தேர்வுக்கான காணொலிகளை கண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *