கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.2.2026

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

*திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும்; கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை, வைகோ திட்டவட்டம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்துள்ளார் ராகுல் காந்தி எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும்: பாஜக எம்பி நிஷிகாந்த் நோட்டீஸ்; மக்களவையில் கடும் அமளி. தூக்கில் கூட போடுங்கள்; கவலை இல்லை, காங்கிரஸ் பதிலடி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து “உடனடியாக வெளியேற்ற” கோரி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே வியாழக்கிழமை ஒரு முக்கிய தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பிரதமரையும் அரசாங்கத்தையும் குறிவைத்து, “நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நான் விவசாயிகளுடன் நிற்கிறேன்” என்றும் “ஒரு அங்குலம் கூட அசைய மாட்டேன்” என்றும் பதிலடி.

* “மதச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” – வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என்ற உள்துறை முடிவுக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலை தான் உள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.

தி இந்து:

* டி.ஜி.பி தேர்வுக்கான குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி இல்லாத பட்சத்தில் டி.ஜி.பி தகுதியில் இருக்கக்கூடிய ஒரு மூத்த அதிகாரி இடம் பெறலாம். உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் பூரியின் பெயர் வந்ததை அடுத்து, காங்கிரஸ் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரியது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *