கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிக்கு சிட்கோவுடன் மாநகராட்சி ஒப்பந்தம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 7- கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளின் சாலை, மின்விளக்கு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்பு களின் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும் வகையில் சிட்கோவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணி

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், தொழிற்பேட்டைகளின் உள்கட்டமைப்புகளை பராமரிக்க, சென்னை மாநகராட்சி சார்பில் சிட்கோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,167 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு 41.38 கி.மீ. நீளத்தில் 128 சாலைகள், 1,558 தெரு விளக்குகள், 8 உயர்கோபுர மின்விளக்குகள், 84 கி.மீ. நீள மழைநீர் வடிகால்கள் உள்ளன. இங்கு தினமும் 40 இடங்களில் குப்பை சேகரமாகின்றது.

கிண்டி தொழிற்பேட்டை 404.08 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு 15.28 கி.மீ. நீளத்தில் 82 சாலைகள், 344 தெரு விளக்குகள், 2 உயர்கோபுர மின்விளக்குகள், 23.50 கி.மீ. நீள மழைநீர் வடிகால்கள் உள்ளன. இங்கு தினமும் 20 இடங்களில் குப்பை சேகரமாகின்றது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டைகளில் உள்ள சிட்கோவின் உட்கட்டமைப்புகள் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *