டில்லியில் அம்பேத்கர் பெயரிலுள்ள பல்கலைக் கழகத்திலேயே அம்பேத்கருக்கு அவமதிப்பா?

2 Min Read

அரசியல்

புதுடில்லி, ஏப்.19- டில்லியில் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரிய மாணவர் மன்றம் ஒருங் கிணைப்பில் 13.4.2023 அன்று ஜோதி பாபுலே, அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கல்லூரி பாதுகாப்பு பணியாளர்களைக் கொண்டு நிகழ்வினை தடுக்க கல்லூரி நிர்வாகம் முயற்சி செய்தது. அதனை முறியடித்து படக் கண்காட்சி மற்றும் பல ஜாதி ஒழிப்பு கலாச்சார நிகழ்வுகளை தோழர்கள் நடத்தி முடித்தனர். நிர்வாகத்தின் முயற்சி பயனளிக்காத நிலை யில், நாடுதழுவிய அளவில் பார்ப்பனரல்லா தாராகிய திராவிடர்களின் உரிமைகளுக்காக, முன்னேற்றத்திற்காகப் போராடிய சமூக நீதி தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதி பாபுலே, சாவித்திரி பாய் புலே  மற்றும் கன்சிராம் ஆகியோரின் படங் களைக் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசி அவமதித்துள்ளனர். 

பல்கலைக் கழக நிர்வாகத்தில் ஊடுரு வியுள்ள பார்ப்பனிய ஜாதி ஆணவவெறி யர்களின் இவ்விழிசெயலைக் கண்டித்து மாணவர்கள் வெகுண்டெழுந்தனர்.

இது தொடர்பாக நிர்வாகத்திடம் மாண வர்கள் அளித்த புகாரின்மீது எந்த நடவடிக் கையும் எடுக்காத நிலையில் அம்பேத்கரிய மாணவர் மன்றம் 17.4.2023 அன்று நிர்வாகத் தின் போக்கிற்கு எதிராக போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 

இதனைத் தொடர்ந்தே, கல்லூரி நிர்வாகம் படங்களை அவமதித்தவர்களின்மீது நடவடிக்கை எடுக்க ஒரு ஒழுங்கு குழுவினை அமைத்தது.

அம்பேத்கரிய மாணவர் மன்றம் – அம் பேத்கர் பல்கலைக்கழகம் டில்லி கீழ்க்கண்ட கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத் திடம் சமர்ப்பித்தனர்.

1. கண்காணிப்பு ஒளிப்பட பதிவுக் கரு வியை சோதித்து, இந்த அவமதிப்பு செயலில் ஈடுபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

2. பல்கலைக் கழகத்தின் அத்தனை வளாகங்களிலும் தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் பழங்குடியினர் நலக்குழு அமைத்திட வேண்டும்.

3. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

டில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கரிய மாணவர் மன்றத்துடன்  தோளோடு தோள் நிற்போம் என்று நாடு தழுவிய அளவில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் ஆதரவு பெருகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *