இதுதான் பிஜேபி ஆட்சியின் சா(வே)தனை! (?) இந்தியாவின் ‘தூய்மையான நகரில்’ தொடரும் சோகம்! அசுத்தமான குடிநீரால் பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு

1 Min Read

இந்தூர், ஜன.29 இந்தியாவின் மிகத்தூய்மையான நகரமாக தொடர்ந்து 7 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வரும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், அசுத்தமான குடிநீர் விநியோகத்தால் பொதுமக்கள் உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி: இந்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மவு (Mhow) மற்றும் பகீரத்புரா ஆகிய பகுதிகளில், பொதுக் கழிப்பறை ஒன்றின் அடியில் சென்ற குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, கழிவுநீர் குடிநீருடன் கலந்துள்ளது. இந்த மாசுபட்ட நீரை அருந்திய ஆயிரக்கணக்கான மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழப்புகள்: கடந்த சில நாட்களாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினையால், இதுவரை 28 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் மீண்டும் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதனால் மேலும் 22 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது பகீரத்புரா பகுதியைச் சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசின் நடவடிக்கை: இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்தியப் பிரதேச அரசு இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதற்காக உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட அலட்சியம் மற்றும் உயிரிழப்பு களுக்கான உண்மையான காரணங்கள் குறித்து இந்த ஆணையம் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஒரு நகரத்தில், அடிப்படைத் தேவையான குடிநீர் மாசடைந்ததால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களிடையே கடும் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *