தமிழ்நாடு அரசின் மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டுதல் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 28- அரசு மாதிரிப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கை பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த, 2021-2022ஆம் கல்வியாண்டில் மாதிரிப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு பவ்வேறு விதமான கட்டமைப்பு வசதிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கி உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை ஊக்குவிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு மாதிரிப் பள்ளிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 9, 10ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரிமாதமும், 11ஆம் வகுப்புக்கு மே மாதமும் நடைபெறும்.

எனவே, முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோரை கொண்டு இதற்கான முன்னோட்ட கூட்டத்தை நடத்த வேண்டும்.

பிப்ரவரி 2ஆம் வாரத்தில் மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் முதன்மைக் கல்வி அலுவலர் உடனே மாவட்ட ஆட்சியர் ஒப்புதலைப் பெற்று அவர் தலைமையில் மாணவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு கூட்டங்கள் நடத்த வேண்டும்.

இந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வாரத்தில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அறிவுரைகளைப் பின்பற்றி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *