திருவாரூர்-வைப்பூரில் சுயமரியாதை நாள் விழா தெருமுனைப் பிரச்சார கூட்டம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வைப்பூர், ஜன. 26- திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்தநாள் (சுயமரியாதை நாள் விழா) தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று (23.1.2026) மாலை 6 மணியளவில் வைப்பூர் கடைவீதியில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. ரவிக்குமார் தலைமையேற்றார். திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, திருவாரூர் ஒன்றிய செயலாளர் செ.பாஸ்கரன், திமுக மய்ய கமிட்டி தலைவர் வி. தங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் மாணவர் கழகத்தை சார்ந்த மு. கயல்விழி வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்ந்து திருவாரூர் திருவிக அரசு கல்லூரி மாணவர் வே.அறிவழகன் இன்றைய நவீன அரசியல் என்று கூறிக்கொண்டு அதில் நடக்கும் அக்கிரமங்களை தோலுரித்து தொடக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் செ ரவிக்குமார் அம்பேத்கர் ஏன் இந்துவாக இருக்க மாட்டேன் என கூறியதற்கான 22 காரணங்களை தொகுத்துக் கூறி தலைமை உரையாற்றினார்.

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி உரையில் 93 வயதிலும் தமிழர் தலைவர் சுற்றுப்பயணம் ஒருபுறம் தொடர்ந்து இளைஞர் போல் சுழன்றடித்து சுற்றி வருகிறார். ஆகையால் இது போன்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை அனைத்து கிளைக் கழகங்கள் வாயிலாக இளைஞர்களை சென்றடைய செய்ய வேண்டும் என தனது கருத்துரையில் தெரிவித்தார். கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி தனது சிறப்புரையில் இதற்கு முன் பேசிய இளைஞரணி மாவட்ட செயலாளர் ரவிக்குமார் மாணவர் கழக மாவட்ட தலைவர் அறிவழகன் ஆகியோர் கருத்துக்களை உள்வாங்கி ஆழமான தனது உரையை நிகழ்த்தியதை தொடர்ந்து அனைத்து கூட்டங்களிலும் இதுபோன்ற இளைஞர்களை மேடை ஏற்றும் படியும், தமிழர் தலைவர் 93ஆவது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டத்தில் தமிழர் தலைவர் கூறிய தந்தை பெரியாருடன் உடன்பட்டவர்களை விட பெரியாருக்கு கடன் பட்டவர்களே அதிகம் என்பதை எடுத்துக் கூறி சிறப்பு உரையாற்றினார்.

நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் திருவாரூர் மாவட்டக் கழக;த தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ. மோகன், மாணவர் கழக மாவட்ட செயலாளர் அறிவுச்சுடர், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சக்திவேல், பாஸ்கர், சுப்பரவேலு, கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தோழர்கள் பங்கு பெற்றனர். நிகழ்வின் இறுதியில் திராவிட மாணவர் கழகம் சார்பில் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவி ப. ஹர்ஷினி நன்றி உரை கூறினார். நிகழ்வுகளை மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *