புதுச்சேரி கண்ணன் மறைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Viduthalai
1 Min Read

சென்னை, நவ. 6- புதுவை மாநில மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் புதுவை கண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புதுவை மாநில மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும் – அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான புதுவை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளவயது முதல் பணியாற்றிய கண்ணன் அவர்கள், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராகத் திகழ்ந்து வந்தவர் ஆவார். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும்.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தின ருக்கும், அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *