இந்தியப் பொருள்களுக்கு 500 சதவீத வரிவிதிப்பு அமெரிக்க அரசைக் கண்டித்து 22ஆம் தேதி சிபிஎம் போராட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் சென்னையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது.

கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பால கிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, பி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3 தீர்மானங்கள்

குடும்ப அட்டைதாரர்களிடம் கைரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, அவர்களிடம் கையெழுத்து பெற்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அரசு திட்டமிட வேண்டும். இந்தியப் பொருட்களுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதைக் கண்டித்தும், அமெரிக்க அரசுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 நகரங்களில் ஜன.22ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.

வெனிசுலா நாட்டின் தலைவர் மதுரோ கைதுக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த 5, 6ஆம் தேதிகளில் போராட்டம் நடத்தின. அப்போது, போராட்டம் தொடங்கும் முன்பாகவே கட்சியினரை காவல் துறையினர் வலுக் கட்டாயமாக கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை கைது செய்து, பொய் வழக்கு போட்டுள்ளனர்.

இதில் முதலமைச்சர் தலையிட்டு, பொய் வழக்குகளை ரத்து செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *