கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ‘பெரியார் விருது’களை எதிர்த்துத் தாக்கல் செய்த ‘ரிட்’ மனு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.12 தமிழ்நாடு அரசால் கடந்த1996ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பெயரில் விருதுகள் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் விருது திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், 2023ஆம் ஆண்டு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோருக்கும் அளிக்கப்பட்டது.

மேற்கண்ட விருதுகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து புதுவெண்ணாம்புதூர் என்ற ஊரினை சார்ந்த டி. சிறீதர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அவர் தொடுத்த ரிட் மனுவில் 1994 முதல் ‘பெரியார் விருது’ அளிக்கும் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருதுகளைத் திரும்பப் பெற்று புதிதாகத் தகுதி பெற்ற நபர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தான் பல்வேறு சமூகப் பணிகளை செய்வதாகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், தனக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேற்கண்ட ரிட் மனு நீதிபதி பி.டி. ஆஷா அவர்கள் முன்பு  (9.1.2026) அன்று விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர்கள் சு. குமாரதேவன், த.வீரசேகரன், ஆர். திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி மனுதாரரின் மனு நிலைக்கத்தக்கதல்ல என்றும், அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *