அறிவியல் துணுக்குகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

10,000 பெண்களிடம் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், காபி அருந்துபவர்களை விட தேநீர் அருந்துபவர் களுக்கு இடுப்பு எலும்பு தாது அடர்த்தி சற்றே அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மிதமான அளவு காபி அருந்தினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; அளவுக்கு அதிகமாக உட்கொள்வது எலும்புத் தேய்மானத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

இரவு நேரத்தில் செயற்கை ஒளி வெளிச்சத்தில் இருப்பது மூளைக்கு அழுத்தத்தை அளித்து, தமனிகளில் வீக்கத்தை உண்டாக்கி, இதயநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என்கிறது ஒரு புதிய ஆய்வு. அதிகப்படியான இரவு நேர வெளிச்சம் நீண்டகால அடிப்படையில் இதய நலத்தைச் சிதைப்பதாகத் தெரிவிக்கிறது.

நீர்நிலைகளை மீட்கவும், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கவும் நீர்நாய் கட்டும் அணைகளைப் போன்ற செயற்கைக் கட்டுமானங்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். வறட்சி, காட்டுத்தீ பரவல் ஆகியவற்றின் தாக்கங்களைக் குறைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இந்த ‘மிமிக்ரி’ தொழில்நுட்பம் மாற்றாக முன்வைக்கப்படுகிறது.

கொசுவின் மிக நுணுக்கமான உறிஞ்சுகுழல் அமைப்பை மாதிரியாகக் கொண்டு, அடுத்த தலைமுறை 3டி பிரின்டிங் முனைகளை பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் மின்னணுவியல் மற்றும் மருத்துவத் துறையில் மிகச்சிறிய அளவிலான பாகங்களை முன்னெப்போதும் இல்லாத துல்லியத்துடன் தயாரிக்க வழிவகுக்கும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வகை ஸ்மார்ட் மோதிரங்கள் சந்தைக்கு வருகின்றன. இவை குரல் கட்டளைகள் மற்றும் சைகைகள் மூலம் இயங்கக்கூடியவை. ஸ்மார்ட் கைப்பேசிகளைத் தொடாமலேயே செயலிகளைக் கட்டுப்படுத்தவும், தகவல்களைப் பெறவும் இக்கருவி உதவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *