கோயில் நிதியிலிருந்து முதியோர் இல்லம் தமிழ்நாடு அரசு ஆணை

1 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ. 26 –  அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களின் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

அதன்படி, வில்லிவாக்கம் சிறீதேவி பாலியம்மன், எலங்கியம்மன் கோயில், நெல்லையப்பர், பழநி தண்டாயுதபாணி கோயில்களின் நிதியிலிருந்து முதியோர் இல்லங் கள் தொடங்க அரசாணை பிறப் பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஆலய வழி பாட்டாளர் சங்கம் சார்பில் மயி லாப்பூர் டி.ஆர்.ரமேஷ், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அமர்வில் 24.11.2023 அன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், “முதியோர் இல்லங்கள் அமைக்க எந்த விதி களையும் பின்பற்றாமல், நேரடி யாக கோயில் நிதி பயன்படுத்தப் படுவது தவறானது” என்று குற்றம் சாட்டப்பட்டது.

அரசுத் தரப்பில் தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந் தரம், மாநில அரசு ப்ளீடர் பி.முத் துக்குமார் ஆகியோர் ஆஜராகி, “கோயில்களில் தக்கார் மட்டுமே இருந்ததால்தான், இந்த நிதியை ஒதுக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது தற்போது அறங் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள தால், அவர்கள் எடுக்கும் முடிவில் யாரும் தலையிட முடியாது” என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், அரசாணையில் தக்கார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, “அந்த அரசாணையை திரும்பப் பெற்று, கோயில் நிதியை பயன் படுத்தும் வகையில், அறங்காவலர் களுக்கு அனுமதி அளிக்கும் புதிய அரசாணை விரைவில் பிறப்பிக்கப் படும்” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *