கோயில் நிதியிலிருந்து முதியோர் இல்லம் தமிழ்நாடு அரசு ஆணை

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ. 26 –  அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களின் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

அதன்படி, வில்லிவாக்கம் சிறீதேவி பாலியம்மன், எலங்கியம்மன் கோயில், நெல்லையப்பர், பழநி தண்டாயுதபாணி கோயில்களின் நிதியிலிருந்து முதியோர் இல்லங் கள் தொடங்க அரசாணை பிறப் பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஆலய வழி பாட்டாளர் சங்கம் சார்பில் மயி லாப்பூர் டி.ஆர்.ரமேஷ், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அமர்வில் 24.11.2023 அன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், “முதியோர் இல்லங்கள் அமைக்க எந்த விதி களையும் பின்பற்றாமல், நேரடி யாக கோயில் நிதி பயன்படுத்தப் படுவது தவறானது” என்று குற்றம் சாட்டப்பட்டது.

அரசுத் தரப்பில் தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந் தரம், மாநில அரசு ப்ளீடர் பி.முத் துக்குமார் ஆகியோர் ஆஜராகி, “கோயில்களில் தக்கார் மட்டுமே இருந்ததால்தான், இந்த நிதியை ஒதுக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது தற்போது அறங் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள தால், அவர்கள் எடுக்கும் முடிவில் யாரும் தலையிட முடியாது” என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், அரசாணையில் தக்கார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, “அந்த அரசாணையை திரும்பப் பெற்று, கோயில் நிதியை பயன் படுத்தும் வகையில், அறங்காவலர் களுக்கு அனுமதி அளிக்கும் புதிய அரசாணை விரைவில் பிறப்பிக்கப் படும்” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *