பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது

2 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 27- அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் நடந்த அங்கன் வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் திரும்பப் பெறப் பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதம்  கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மய்யங் களுக்கும் 1 மாதம் கோடை விடு முறை விட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங் கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் 25.4.2023 முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவ லகங்களுக்கு முன்பாக தொடர் காத் திருப்பு போராட்டத்தை நடத்தி வந் தனர். இரவு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களிலேயே தங்கி தங் கள் போராட்டத்தை தொடர்ந் தனர். நேற்றும் (26.4.20223) பல் வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கன் வாடி ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணுமாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச் சர் பெ.கீதா ஜீவனுக்கு அறிவுறுத்தினார். 

அதன்பேரில், தூத்துக்குடி சட்ட மன்ற உறுப்பினர் அலுவல கத்தில் நேற்று (26.4.2023) காலை யில் அமைச்சர் கீதாஜீவன், தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர் சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத் தினார். இதில் சங்கத்தின் மாநில தலை வர் எஸ்.ரத்தின மாலா, பொதுச் செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ்.தேவமணி உள் ளிட் டோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தமிழ்நாடு அங் கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். 1 மாத கோடை விடுமுறை மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகள் அரசு ஏற்கெனவே பரிசீலனை செய்து வரும் கோரிக் கைகள் தான். இதுதொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நல்ல தகவல்களை தெரிவிப்போம் என அவர்களிடம் தெரிவித்து உள் ளோம். இதனை ஏற்று போராட் டத்தை திரும்பப் பெறுவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெய்சி கூறுகையில், ‘எங்களது கோரிக்கைகளை முதல மைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த ஆண்டே நிறைவேற் றுவ தாக அமைச்சர் உறுதியளித்து உள் ளார். 

அவரது உறுதிமொழியை ஏற்று 50 ஆயிரம் அங்கன்வாடி ஊழி யர்கள், உதவியாளர்கள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டத்தை திரும்பப் பெறுகிறோம்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *