ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, டிச.29 தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் பாரம்பரிய மீன் பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப் படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர் களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் உரிய தூதரக நட வடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து 27.12.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கை கடற்படையினர் இன்று (28.12.2025) கைது செய்த மற்றொரு சம்பவத்தை வெளி யுறவுத் துறை அமைச்சரின் கவனத் திற்கு கொண்டு வருவதாக முதல மைச்சர் தனது கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கவலையுடன் குறிப் பிட்டுள்ள முதலமைச்சர், இக்கைது நடவடிக்கைகள் நமது மீனவர்களின் வாழ்வா தாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரி வித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன் பிடிப் படகுகளும், 61 மீனவர் களும் இலங்கை அதிகாரி களின் காவலில் உள்ளதாக தனது கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
