தந்தை பெரியார் நினைவு நாள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24.12.2025 புதன்கிழமை காலை 08.30 மணி -அன்னை சிவகாமி நகர் பெரியார் சிலை, 09.00 மணி- புதிய  பேருந்து நிலையம் பெரியார்  சிலை, 09.15 மணி – பூபதி நினைவு பெரியார் படிப்பகம் பெரியார் சிலை, 09.30 மணி-  பழையபேருந்து    நிலையம் பெரியார் சிலை.

மேற்கண்ட இடங்களில்  திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்க உள்ளதால் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் தோழமை இயக்க பொறுப்பாளர்கள் தோழர்கள்  அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்: தஞ்சை மாநகர திராவிடர் கழகம்

– – – – –

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் 24.12.2025, நினைவை போற்றும் வகையில் கல்லக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள  தந்தை பெரியார் சிலைக்கு புதன் கிழமை காலை 9:00 மணிக்கு மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமையில், மாநில கழக மருத்துவரணி செயளாலர் கோ.சா.குமார், மாவட்ட கழக செயலாளர் ச.சுந்தரராசன், பெ.செயராமன் மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர், சி.முருகன் மாவட்ட ப.க அமைப்பாளர் ஆகியோர் முன்னிலையில் கழக தோழர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து சிறப்பு செய்யவுள்ளதால் கழகத் தோழர்கள் அனைவரும் சரியான நேரத்துக்கு வந்து கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம். அழைப்பு: கல்லக்குறிச்சி மாவட்ட தி.க., ப.க.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *