புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவிப்பு – மரியாதை

1 Min Read

அரசியல்

இன்று (29.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், ‘புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்’ அவர்களின் 133-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரது  சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த  படத்திற்கு   செய்தித் துறை அமைச்சர்   மு.பெ. சாமிநாதன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்   மா. சுப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான  பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்   ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்  த. மோகன்,  ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *