திருப்பரங்குன்றம், டிச.22– சந்தனக்கூடு விழாவுக்கு முஸ்லிம்கள் செல்லும் நிலையில் திருப்பரங்குன்றம் மலை ஏற அனுமதிக்கும்படி போராடிய உள்ளூர்கா ரர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தனக்கூடு திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக மலையில் ஏறிச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அங்கு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகிற 6 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக நேற்று (21.12.2025) கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடந்தது. இதற்காக தர்கா தரப்பினர் மலை மீது ஏறிச்சென்று உரிய பணிகளை கவனித்து வருகின்றனர்.
திடீர் போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மலைக்கு மேலே செல்லக்கூடிய முக்கிய பாதையான பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த பூர்வீகக் குடியிருப்புப் பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுடன் நேற்று (21.12.2025) மதியம் 1.35 மணி அளவில் திரண்டனர். அதில் ஒரு பெண் தனது கையில் அகல்விளக்கு ஏந்தியபடி வந்தார்.
பின்னர் அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம் என்று அடாவடி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உள்ளிட்ட யாரும் மலையின் மீது ஏறிச்செல்ல அனு மதிக்கப்படவில்லை. ஆனால், சந்த னக்கூடு திருவிழாவுக்காக முஸ்லிம்கள் மட்டும் மலை மீது ஏறிச்செல்ல அனு மதிக்கப்படுவது ஏன்? இதில் பாரபட்சம் காட்டப்படுவது ஏன்?
எனவே, மலைக்குச் செல்ல எங்க ளையும் அனுமதி அளியுங்கள். இல்லை என்றால் மலை மீது செல்ல முஸ்லிம்க ளையும் அனுமதிக்க மாட்டோம். மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்… என்று முழக்கங்களையும் எழுப்பினர்.
28 பேர் கைது
இதைத்தொடர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 28 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை அரசு பேருந்தில் ஏற்றிச்சென்று திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினர் தங்க வைத்தனர். குழந்தைகளையும் காவல்துறையினர் பேருந்தில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலைமறியல்
இதற்கிடையே கைதானவர்கள் அனைவரையும் விடுவிக்கக்கோரி திருநகர் ஒன்றாவது பேருந்து நிறுத்தம் பகுதியில் பாரதீய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடு பட்ட பா.ஜனதாவினர் 200 பேரை கைது செய்தனர்.
எப்படியாவது ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதில் சங்கிகள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.
