சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

காலை 8.00 மணி:  பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு,  தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, அண்ணா  சாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட இளை ஞரணி சார்பில் மாலை அணிவிப்பு, கொடுங்கையூர் காமராசர் சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மாலை அணிவிப்பு.

தமிழர் தலைவர் தலைமையில்

‘அமைதி ஊர்வலம்’

காலை 10.00 மணி:  சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகி லிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி  அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் பெருந் திரளான அளவில் திரண்டு பங்கேற்கும் ‘அமைதி ஊர்வலம்’ தொடங்கி, சிந்தாதிரிப் பேட்டை வழியே பெரியார் திடலை அடைகிறது.

நினைவிடங்களில் மரியாதை

காலை 11.00 மணி: பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை யில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு: கழக மகளிரணி சார்பில், பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு; திராவிடர் தொழிலாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ ஆகிய  நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *