கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

19.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* காந்தியின் பெயரை நீக்கி நிறைவேற்றிய புதிய மசோதாவுக்கு கண்டனம்: ஒரே நாளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கொன்று விட்டது மோடி அரசு – ராகுல் காட்டம்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: எஸ்அய்ஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் அதிர்ச்சி; பெயர் இடம் பெறாதவர்கள் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம்.

* யு.ஜி.சி. போன்ற அமைப்புகளை கலைத்து விட்டு ‘விக்சித் பாரத் சிக்‌ஷா அபிஸ்தான்’ என்ற அமைப்பை மோடி அரசு உருவாக்குவது, கல்வியை வணிகமயமாக்கும் செயல் என அகில இந்திய மாணவர் அமைப்பு எதிர்ப்பு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக காந்தியின் பெயரை நீக்கி விபி ஜி ராம் ஜி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட மசோதா மாநிலங்களவையில் நள்ளிரவில் நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மக்களவையில் நகலை கிழித்து சபாநாயகர் மீது வீச்சு; நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு.

* தெலங்கானா கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் 45 சதவீத இடங்களுக்கு மேல் பிற்படுத்தப்பட்டோர் வெற்றி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘நவீன இந்தியாவை உருவாக்கிய 3 பேரை அவமதிப்பதே பிரதமர் மோடியின் உத்தி’, குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் கண்டனம்.

தி இந்து:

* கார்த்திகை தீபம்: கிறிஸ்தவர்கள் பெரும் பான்மையாக உள்ள கிராமத்தில் விழா நடத்த அனுமதித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

தி டெலிகிராப்:

* பிரதமர் மோடிக்கு ‘கடுமையான ‘A.C.R.O.N.Y.M நோய்’ உள்ளது, அதாவது ‘A.C.R.O.N.Y.M அமைச்சர் துறை — பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவதற்கான நிர்வாக ஆணையம் — புதியது ஆனால் அர்த்தமற்றது’ ராம்-ஜி மசோதா ‘வடிவமைப்பிலேயே ஏழைகளுக்கு எதிரானது’ என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஒரு ஊழியரின் ஜாதி நிலையை சரிபார்க்க முதலாளிக்கு அதிகாரம் இல்லை என்றும், அத்தகைய அதிகாரங்கள் மாவட்ட ஜாதி சரிபார்ப்புக் குழுவிடம் மட்டுமே உள்ளன என்றும் கருநாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 – குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *