கோவையில் சிந்து சரஸ்வதி கருத்தரங்கிற்கு எதிர்ப்பு திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் முற்றுகை போராட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கோவை, டிச. 20- கோவையில் சிந்து சரஸ்வதி கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

சிந்து – திராவிட நாகரிகத்தை “சரசுவதி நாகரிகம்” என திரிக்கும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், இந்நிகழ்விற்கு வருகை தரும் ஆர்எஸ்எஸ்.ரவியை கண்டித்தும் முற்றுகைப் போராட்டம் வட கோவை பவர் ஹவுஸ் அருகில் 19.12.2025 அன்று தோழர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது,

திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட தலைவர் மா சந்திரசேகர், மாவட்ட காப்பாளர் பழ அன்பரசு, கோவை மாநகர தலைவர் தி.க செந்தில்நாதன், மாநகர செயலாளர் க.வீரமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ப. கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் ச. திலகமணி, பீளமேடு பகுதி கழக தலைவர் ரமேஷ், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சா.ராசா, கணபதி பகுதி தலைவர் கவி கிருஷ்ணன், பகுதி செயலாளர் திராவிடமணி, வடவள்ளி பகுதி கழக தலைவர் இராஜசேகரன், மற்றும் முத்துகணேசன், லூகாஸ் பீட்டர், ஆனைகட்டி சம்பத், பொள்ளாச்சி இளைஞரணி தலைவர் ம.பிரவீண், கணேசன், சிவகுமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் த பெ தி க, கம்யூனிஸ்டு கட்சிகள் விசிக, தி.இ.த.பே, ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், தமிழ்ப் புலிகள் கட்சி, த.மு.எ.க.ச, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட ஏராளமான முற்போக்கு அமைப்பின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *