குரூப்–4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 15 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் 4000 என ஏற்ெகனவே தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் இன்னும் கூடுதல் காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாநில அரசின் பதவிகளை நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என முக்கியமான அரசதிகாரப் பதவிகளை டி.என்.பி.எஸ்.சி. நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 15,000க்கும் அதிகமான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின்றன. லட்சக்கணக்கான பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆண்டு செயல்திட்டம் (Annual Planner) மூலம் டிஎன்பிஎஸ்சி ஆணையம் தேர்வு குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறது. இதன் கீழ், வரவிருக்கும் ஆண்டில் என்னென்ன தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தகவல்களை டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுடன் முன்கூட்டியே பகிர்ந்து கொள்கிறது.

அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. 2026 ஆண்டு திட்டத்தின் கீழ், இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப் 4  தேர்வு குறித்த அறிவிப்பு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணி யிடங்கள் 4000 என ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் இன்னும் கூடுதல் காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, ஏற்கனவே 4,000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப் பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 400 காலிப் பணியிடங்களை உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *