நாகர்கோவில், டிச. 13- குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் வடசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், ஞா.பிரான்சிஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், கோட் டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், தூண்டறிக்கைகள், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
நாகர்கோவில் மாநகர பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்
Leave a Comment
