மசூதி கட்ட நேரு ஒப்புதல் வழங்கினாரா? காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்ஆதாரத்துடன் மறுப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அகமதாபாத்,  டிச.12 குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவஹர் லால் நேரு பாபர் மசூதியைக் கட்ட அரசு  நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும், ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அதை உறுதியாக எதிர்த்து தடுத்தார் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு ஆதாரமாக அப் போதைய பாஜக தலைவர்கள் மற்றும் சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள பதிவுகளைச் சுட்டிக்காட்டினார் .

அந்த நாட்குறிப்பின்படி, 1950 செப்டம்பர் 20 அன்று நேரு, பாபர் மசூதி குறித்து ஒரு கேள்வியை எழுப்பியதாகவும், அதற்குப் படேல், “மசூதி கட்ட அரசு பணம் கொடுக்க முடியாது” என்று தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் கூற்றுக்களை மறுத்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்று சாடினார்.

மேலும், மணிபென் படேலின் நாட்குறிப்பின் அசல் குஜராத்தி பக்கங்களை இன்று நாடாளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த ராஜ்நாத் சிங்கிடம் ஜெய்ராம் ரமேஷ் தந்துள்ளார்.

முன்னதாக ராஜ்நாத் சிங் பரப்பும் கருத்துகளுக்கும் அசல் பதிவுகளுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

நேரு எப்போதும் கோவிலோ, மசூதியோ, தேவாலயமோ என எந்த மத நிறுவனத்திற்கும் அரசுப் பணம் செலவழிக்கப்படுவதை எதிர்த்தார் என்றும், மாறாக அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த விரும்  பினார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *