நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இந்து – முஸ்லிம் பிரச்சினை என்றால் லட்டு சாப்பிடுவது போல் இருக்கிறது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் பேட்டி

சென்னை, டிச.11– உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் விமர்சித்துள்ளார். திருப் பரங்குன்றம் தீர்ப்பு தொடர்பாக மேனாள் நீதிபதி அரி பரந்தாமன், வாஞ்சிநாதன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது பேசிய நீதிபதி அரி பரந்தாமன், “திருப்பரங் குன்றம் விவகாரத்தில் அவசர அவசரமாக வழக்கை விசாரித்து, சட்டவிதிகளை மீறி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இவர் RSS அமைப்பைச் சேர்ந்தவர். நீதிபதிகள் நடுநிலையோடு செயல் பட வேண்டும். ஆனால், இவர் அப்படி செயல்பட வில்லை. கோயில் நிருவாகம் தவிர்த்து வேறு யாரும் தீபம் ஏற்ற உரிமை இல்லை. தீபம் எங்கே ஏற்றுவது என்பதையும் கோயில் நிருவாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.

2021-இல் திருப்பதி கோயில் வழக்கில் தேவஸ் தானம்தான் முடிவுகளை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை என்றால் லட்டு சாப்பிடுவது போல் இருக்கிறது. இங்கே இருக்கும் மத நல்லிணக்கம் அவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. திருப்பரங் குன்றம் தீப வழக்கில் எதிர் மனுதாரரின் பதிலைக் கேட்காமலேயே இறுதி ஆணை வழங்கப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பாஜக தலைவர் எச்.ராஜா போலவும், ஆளுநர் ஆர்.என்.ரவி போலவும் செயல்படலாமா?. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு 100க்கும் மேற் பட்ட நீதிமன்ற அவ மதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதம் சம்பந்தப்படாத வழக்கு தவிர்த்து வேறு ஏதாவது வழக்கில் இவ்வளவு தீவிரம் காட்டி யிருக்கிறாரா நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்? கோயிலுக்கே முழு உரிமை; சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டே தீபம் ஏற்றுவதை தீர்மானிக்க வேண்டும்,”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *