விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை..! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.5 குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மாநிலத்தின் முக்கிய நலத்திட்டம் ஆகும்.அதே நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதற்கிடையில் விடுபட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் சிவகாசியில் நேற்று (4.12.2025) நடைபெற்ற மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. உடனடியாக வழங்க வேண்டும் என்று விடுபட்ட பெண்கள் அளித்த மனுக்கள் தான் ஏராளம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறிவிப்பு என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பேசுகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக 1.15 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் தடைகளையும் தாண்டி தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *