ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெயங்கொண்டம், டிச.4-ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உண்மை, துணிவு, மனித நேயம் மூன்றையும் வாழ்வாக மாற்றிய  தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக  கொண்டாடப்பட்டது.

விழாவின் துவக்கமாக முதல்வர்அவர்கள் தன் உரையில்,

“சமூகம் முன்னேற வழிகாட்டிய உயர்ந்த சிந்தனையாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள், மாணவர்களுக்கு மனித நேயம் மற்றும் சமத்துவம் பற்றி புரிய வைக்கும் சிறந்த நாள்” எனவும் “அறிவு – மனிதநேயம் – சமத்துவம்” என்ற மூன்று கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என  வலியுறுத்தினர்.

மேலும் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி நடைபெற்றது.

ஆசிரியரின் சாதனை களையும், இயற்றிய நூல்களையும் அதன் பயன்களையும் அழகாக விளக்கி கூறினர்.

அவர் பெற்ற விருதுகளை பெருமிதத் துடன் எடுத்துரைத்தனர். பிறந்த நாள் கவிதையை அழகாக வாசித்தனர். எல்கேஜி மழலையர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்

இந்த நிகழ்வு, மாணவர்களின் மனதில் உண்மை, ஒழுக்கம், சமத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பதியச்செய்த ஒரு அரிய நாளாக அமைந்தது.

பள்ளியின் முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *