பேரண்டத்தில் ‘பெருஞ்சுருக்கம்’ நிகழுமா?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நம் பேரண்டம் அதி வேகமாக விரிவடைந்து கொண்டே போவதாக அண்டவியலாளர்களில் ஒரு தரப்பினர் வாதிடு கின்றனர். ஆனால், அண்டம் விரிவடையும் வேகம், ஏற்கெனவே குறைந்து கொண்டிருக்கலாம் என்கின்றனர் தென்கொரியாவின் யோன்சே பல்கலை. ஆராய்ச்சியாளர்கள். நீண்ட காலமாக, அண்டம் விரிவடையும் வேகத்தை கணக்கிடும் அளவுகோலாக, ‘1-ஏ வகை சூப்பர்நோவா’ எனப்படும் மீயொளிர் விண்மீன் வெடிப்பிலிருந்து பெறப்பட்ட தரவுகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். தென்கொரிய விஞ்ஞானிகள், அந்தத் தரவுகளை மீண்டும் பகுப்பாய்வு செய்து, அந்த அளவீடுகளில் பிழை உள்ளதாக வாதிடுகின்றனர் .

இந்த ஆய்வு முடிவு, தீராத, எப்போதும் விலக்கும் ஆற்றல் கொண்ட இருண்ட ஆற்றல் (Dark energy) பேரண்டத்தில் உள்ளது என்ற கருத்தை பலவீனப்படுத்துகிறது. மாறாக, இந்த புதிய ஆதாரம் இருண்ட ஆற்றலின் தாக்கம் காலப்போக்கில் பலவீனமடைந்து வருகிறது என்கிறது. இது உண்மையாக இருந்தால், அண்டத்தின் புரிதலுக்கு அடிப்படையாக இருக்கும் அண்டவியல் மாதிரி (cosmological model) திருத்தப்பட வேண்டியிருக்கும்.

இந்த முடிவுகள் இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஒருமித்த கருத்துக்கு சவால் விடுகின்றன. மேலும், சில ஆய்வாளர்கள் தற்காலிகமாக முன்வைத்த புள்ளியியல் திருத்தங்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவுகள் இருக்கின்றன. ஆயினும், இதன் தாக்கங்கள் ஆழமானவை.

பேரண்டம் விரிவடையும் வேகம் குறைகிறது என்றால், அது இறுதியில் சுருங்கவும் கூடும். இது ‘பெருஞ்சுருக்கம்’ (Big Crunch) போன்ற ஒரு நிகழ்வுக்கு வழி வகுக்கலாம். இது அண்டத்தின் கடந்த காலம் மற்றும் அதன் எதிர்காலம் பற்றிய நம் சொல்லாடல்களை தலைகீழாகத் திருப்பிப்போடும் ஒரு கண்டு பிடிப்பாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *