ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம் சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

1 Min Read

புதுடில்லி, நவ.26- ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில், நேற்று (நவ.25) ரயில்வேதுறை ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்ட நிலையில், தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சி, பொதுமக்கள் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்தார்.

மேலும் ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம் என தலைப்பிட்டு, “2024-2025ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ. 31,458 கோடி ஒதுக்கப்பட்டது.

அதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ. 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் முன்வைத்த கோரிக்கைகளையும் அறிக்கை வடிவில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *