திருப்பரங்குன்றம் முருகன் என்ன செய்கிறான்? முருகனின் வேல் திருட்டு

1 Min Read

மதுரை, மே 7– கண்காணிப்பு கேமராவில் விபூதி தூவி திருப்பரங்குன்றம் மலை கோவிலில் வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுபோனது 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசு வநாதர் கோவில் மற்றும் மலைமேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகனின் தனி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5.5.2023 அன்று மாலையில் பூஜையை முடித்துவிட்டு வெளிப்பிரகார கதவில் பூட்டு போட்டு வந்து விட்டனர். இந்த நிலை யில் சிலர் பூட்டை உடைத்து உள்ளே புகுந் துள்ளனர். 

பின்னர் அவர்கள் முருகனின் கரத்திலிருந்த சுமார் 3 அடி உயரமுள்ள வேல், குத்துவிளக்கு உள் ளிட்ட பூஜை பொருட் களை திருடி உள்ளனர். இந்த நிலையில் காசிவிசுவநாதர் கோவிலில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த ஒரு சில பொருட்களையும் திருடி உள்ளனர். 

இந்த நிலையில் காவல் துறையில் தங்களை அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் விபூதியை ஊதி மறைத்துள்ளனர். மேலும் அவர்கள் கண் காணிப்பு கேமராவின் பதிவு சேமிக்ககூடிய ஹார்டுடிஸ்க்கையும் திருடி சென்றுவிட்டனர். 

இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் காவல்துறையில் கோவில் நிர்வாகம் புகார் செய்துள்ளது. அதன் பேரில் காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *