ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் இந்தியாவுக்கு வங்கதேச இடைக்கால அரசு மீண்டும் கடிதம்

1 Min Read

டாக்கா, நவ. 25- வங்கதேச மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, அப்போது பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த நவ.17-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தியாவில் ஹசீனா தஞ்சமடைந்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வங்கதேச இடைக்கால அரசு அதிகாரபூர்வ ராஜீய கடிதத்தை அனுப்பியுள்ளது.

கடந்த நவ.21-ஆம் தேதி டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மூலம், ஒன்றிய அரசுக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகர் முகமது தெளஹித் ஹுசைன் கூறினார் என்று அந்நாட்டு அரசு செய்தி முகமை தெரிவித்தது.

ஏற்கெனவே ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசுக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம் அனுப்பியிருந்தது. அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதை ஒன்றிய அரசு உறுதி செய்தபோதிலும், அதுகுறித்து கூடுதல் விவரங்களை தெரிவிக்கவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *