நடைப்பயணத்தின்போது தி.மு.க. ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்! வைகோ அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, நவ. 18- திருச்சி-மதுரை இடையே மேற்கொள்ளும் நடைபயணத்தின்போது, திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

போதைப்பொருள் ஒழிப்பு, ஜாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் திருச்சியிலிருந்து மதுரை வரை ஜன. 2 முதல் 12ஆம் தேதி வரை சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. நடைபயணத்தில் பங்கேற்க உள்ள இளைஞர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை மதுரையில் வைகோ நேற்று (17.11.2025) நடத்தினார். முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மது, போதைப் பொருட்களால் பள்ளி  கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் ஜாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இவற்றை பள்ளி  கல்லூரி ஆசிரியர்கள், முதலமைச்சர்கள் தடுக்க வேண்டும். கல்லூரிகளில் நட்பு, சமூக உணர்வு வளர வேண்டும். மது, போதையை ஒழிக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது, போதைப்பொருள் ஒழிப்பு, ஜாதி சங்கங்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியிலிருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். அப்போது திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன். திருச்சியில் எனது நடைபயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதுரையில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *