பக்தர்களின் வாகனம்! டிராக்டருடன் மோதி 6 பேர் பலி

0 Min Read

ஜெய்ப்பூர், நவ.17- ராஜஸ்தானில் பக்தர்கள் சென்ற சரக்கு வாகனத்துடன் டிராக்டர் மோதியதில் 6 பேர் பலியானார்கள்.  குஜராத் மாநிலம் பனஸ்சுந்தா மற்றும் தான்சுரா பகுதியை சேர்ந்த சுமார் 20 பக்தர்கள், ஒரு சரக்கு வேனில் ராம் தியோரா நோக்கி சென்று கொண்டிருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்-பாலேசர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றபோது, எதிர்திசையில், தானிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிராக்டருடன் சரக்கு வேன் மோதியது.  இந்த விபத்தில், சரக்கு வாகனம் சென்ற 6 பக்தர்கள் பலியானார்கள். அவர்களில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *