சிக்கல் சிங்காரவேலவர் கோயில் அர்ச்சகர்: பிஜேபிக்குப் பிரச்சாரம்!

1 Min Read

நாகப்பட்டினம், நவ.17- அனைவரின் உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும் என்று சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் அர்ச்சகர் பேசும் காட்சிப் பதிவு வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்காரவேலவர் கோவில்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்கோவிலுக்குப் பெங்களூருவில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

காட்சிப் பதிவு வைரல்

அப்போது அந்த பக்தர்களிடம் கோவில் அர்ச்சகர் ஒருவர், கோவில் தல வரலாற்றை கூறும்போது, அம்பாள் கையில் தாமரை பூவுடன் இருக்கிறாள். அனைவரின் உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும். சாமி எல்லோருக்கும் அனுக்கிரகம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதை பெங்களூருவில் இருந்து வந்த பக்தர்கள் காட்சிப் பதிவு எடுத்து உள்ளனர். தற்போது இந்தக் காட்சிப் பதிவு கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *