சுயமரியாதை கொள்கை மாவீரர் மயிலை நா. கிருஷ்ணனுக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சீரிய பகுத்தறிவாளரும், கழகப் புரவலரும், நமது கெழுதகைத் தோழரும் ஆன மானமிகு
மயிலை நா. கிருஷ்ணன் (வயது 91) அவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் இன்று (14.11.2025) அதிகாலை 3.00 மணிக்கு மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து சொல்லொணாத் துயரத்தையும், துன்பத்தையும் எமது கொள்கைக் குடும்பத்தவரும், குருதிக் குடும்பத்தவரும்  வேதனையோடுப் பெற்றோம்.

மறைந்த  நமது தோழர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்கள், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் அறக்கட்டளையின் மூத்த ஆயுள் உறுப்பினராக பல ஆண்டுகள் தொண்டறம் புரிந்து வந்தவர்.

கடந்த சில மாதங்களாகவே அவர்கள் திண்டுக்கல்லில் உடல் நலக் குறைவு ஏற்பட்டுத் தேறி வந்தார்கள்.

அவர்களை நானும், எனது வாழ்விணையர் திருமதி மோகனாவும் சென்ற மாதம் நேரில் சென்று கண்டு, நலம் விசாரித்து, குடும்பத்தினர் திருமதி பரமேஸ்வரி அவர்களிடம்,  மகன்கள், மகள்கள், உறவுகள் அனைவரிடமும் பேசித் திரும்பினோம்.

கொள்கையில் தீவிரப் பற்றாளர், எவரிடமும் பண்புடனும், பாசத்துடனும் பழகுபவர். சென்னை பெரியார் திடலில் உள்ள  பெரியார் நூலக  வாசகர் வட்டத் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பேற்று திறம்பட நடத்திய, நாணயம் மிக்க ஒரு வழிகாட்டியாவார்.

அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் திருமதி பரமேஸ்வரி, மகன்கள் அசோக், மதிவாணன்,  மகள்கள்  சாந்தி,  ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றோம்.

மறைந்த ெகாள்கை மாவீரருக்கு நமது வீர வணக்கம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

14.11.2025          

குறிப்பு: மறைந்த மயிலை நா. கிருஷ்ணன் இறுதி நிகழ்வில்  திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், நேரில் சென்று கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *