நாள்: 16.11.2025 – ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி.
இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி.
தலைமை:- கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை:- செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்)
முன்னிலை:- பழ.பிரபு (கழகக் காப்பாளர்),
தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்)
பொருள்:- 1) டிசம்பர் 28.12.2025- ஞாயிறு அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கிருட்டினகிரி மாவட்டம் வருகை.
2) பெரியார் உலகம் நிதிதிரட்டுதல்.
3) டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள்.
4) செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களையும் மற்றும் தலைமைச் செயற்குழு தீர்மானங்களையும் செயல்படுத்துதல்.
5) டிசம்பர் 24-அன்று தந்தை பெரியார் நினைவுநாள் மற்றும் கழக ஆக்கப்பணிகள்.
சிறப்புரை:- ஊமை.செயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்).
கருத்துரை:- அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).
நன்றியுரை:- சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்)
கூட்டத்தில் கிருட்டினகிரி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் அவசியம் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.
