உச்சநீதிமன்றத்தில் 69,000, உயர்நீதிமன்றங்களில் 59,000 வழக்குகள் நிலுவை

1 Min Read

உச்சநீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 59 லட்சத் துக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவை யில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உச்சநீதிமன்ற இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி பிப்ரவரி 1ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 59,87,477 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய நீதித் துறை தகவல் மய்யத்தில்இருந்து இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மிக அதிக பட்சமாக 10.30 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் குறைந்த பட்சமாக 171 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தேசிய அளவில் அனைத்து நீதிமன்றங்களிலும் சேர்த்து 4.32 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நிலுவை வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்க ஒன்றிய அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *