பதவிக்குரிய கண்ணியத்தை பிரதமர் காக்க வேண்டாமா? பிரியங்கா தாக்கு

1 Min Read

கதிகார், நவ.9– பீகாரின் கதிகாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று (18.11.2025) பேசினார். அப்போது பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.

குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள் என பிரதமர் மோடி கூறியதற்கு கடுமையாக எதிர்வினையாற்றினார்.

அவர் பேசும்போது, ‘பிரதமர் மோடி ஒருபுறம் அகிம்சையை ஆதரிக்கும் வந்தே மாதரத்தை புகழ்கிறார். மறுபுறம் துப்பாக்கி பற்றி பேசுகிறார். இதுபோன்ற வார்த்தைகளை பேசும் அவர் தனது பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தை பாதுகாக்கவில்லை’ என குற்றம் சாட்டினார்.

மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தவறி விட்டதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை குறை கூறிய பிரியங்கா, மாறாக பொதுத்துறை நிறுவனங்களை தனது 2 கார்பரேட் நண்பர்களுக்கு பிரதமர் மோடி தாரை வார்ப்பதாகவும் சாடினார். ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக காந்தியார் போராடிய அதே போராட்டத்தில் காங்கிரஸ் தற்போது ஈடுபட்டு உள்ளதாகவும் பிரியங்கா கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *