இப்படியும் ஒருவரா? எறும்புக்குப் பயந்து இளம்பெண் தற்கொலை!

1 Min Read

மஞ்சேரி, நவ.9– தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் மஞ்சேரியலை சேர்ந்தவர் சிறீகாந்த். அய்டி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா (வயது 25). தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.

மனிஷாவுக்கு சிறு வயது முதலே எறும்பை கண்டு பயப்படும் மிர்மிகோ போபியா என்ற வியாதி உள்ளது. இந்த வியாதி உள்ளவர்கள் எறும்புகளை கண்டால் பயந்து அலறி நடுங்குவார்கள். மனிஷா இந்த வியாதிக்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

7.11.2025 அன்று காலை சிறீகாந்த் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார். பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார். எறும்புகளை கண்டு பயந்து போன மனிஷா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்தார். அதில் அய் எம் சாரி சிறீ. என்னை மன்னித்துவிடு. குழந்தையை நன்றாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன். மாமியாருக்கு சாப்பாடு போட மறந்து விடாதே என எழுதினார்.

பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மனிஷாவின் பிணத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எறும்புகளுக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *