இந்தியா கூட்டணி என்பது மக்கள் கூட்டணியே ஒற்றை நபர் கட்சி அல்ல: காங்கிரஸ் கருத்து

பீகார் சட்டசபை தேர்தலுக்கு இந்தியா கூட்ட ணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிக்கப்பட்ட நிலையில், அகில இந் திய காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று நினைத்தவர்கள் ஏமாந்து விட்டனர். தேஜஸ்வி, முதலமைச்சர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள் ளார் . இந்தியா கூட்டணி என்பது ஒற்றை நபர் கட்சி அல்ல, இது ஒரு மக்கள் கூட்டணி. பரஸ்பர மரியாதை, அனைவரையும் அரவணைத்தல், அதிகார பகிர்வு கொள்கை ஆகியவை அடிப்படையில் உருவான கூட்டணி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *