கடல் நீரிலிருந்து மட்கும் நெகிழி

1 Min Read

டல் நீரின் அமிலத்தன்மையைக் குறைக்கவும், மட்கக்கூடிய நெகிழிகளின் உற்பத்திக்குத் தேவையான ரசாயனம் தயாரிப்புக்கும் உலகில் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.  இதற்கு முன், இதே முயற்சியை மின் வேதியியல் முறையில் பல நிறுவனங்கள் முயன்று வெற்றி கண்டன. ஆனால், 1 டன் கரியமில வாயுவை உற்பத்தி செய்ய 373 டாலர் தேவைப்பட்டது. இந்த நிலையில் தான் சீன அறிவியல் அகாடமி, 230 டாலரிலேயே இதை செய்து காட்டியுள்ளது.

முதல் கட்டமாக மின்சாரத்தை கொண்டு கடல் நீர் அமிலமாக்கப்படும். இதன் வாயிலாக கரியமில வாயு கடல் நீரிலிருந்து பிரிக்கப்படும். பிறகு கடல் நீர் அமிலத்தன்மை சீர் செய்யப்பட்டு வெளியேற்றப்படும்.

கரியமில வாயு பிஸ்முத் (bismuth) அடிப்படையிலான வினையூக்கி கொண்டு திரவ போர்மிக் அமிலமாக மாற்றப்படும். பிறகு விப்ரியோ நேட்ரைகென்ஸ் முதலிய சில நுண்ணுயிரிகள் உதவி யுடன் சக்சினிக் அமிலமாக மாற்றப்படும். மட்கக்கூடிய நெகிழிகளின் உற்பத்திக்கு தேவையான பாலிபியூட்டிலீன் சக்ஸினேட் ரசாயனம் தயாரிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே, இதன் மூலம் கடல் அமிலத்தன்மையையும் குறைக்கலாம், மட்கும் நெகிழி உற்பத்தியை அதிகரித்து சுற்றுச் சூழலையும் காக்கலாம். ஒரே செயல்முறையில் இருவித பலன்களை பெறலாம். நம் வளிமண்டலத்தில் இருப்பது போல் 150 மடங்கு அதிகமான கரியமில வாயு ஏற்கனவே கடலில் உள்ளது. இதன் அளவு மேலும் அதிகரித்து வருகிறது. இதனால், கடலின் அமிலத்தன்மை கூடி, கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். சமீபத்தில் சீன அறிவியல் அகாடமி, கடல் நீரிலிருந்து கரியமில வாயுவை பிரித்தெடுத்து, அதிலிருந்து பிளாஸ்டிக் உற்பத்திக்கு தேவையான ரசாயனங்களை தயாரிக்கும் முறையை உருவாக்கி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *