ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை

சென்னை, அக்.20 அண்ணா பல்கலைக்கழக மே​னாள் துணைவேந்​தர் ஆர்​.வேல் ​ராஜ் மீது எடுக்​கப்​பட்ட இடைநீக்கம் நடவடிக்​கையை ரத்​து செய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை நிராகரிக்க பல்​கலைக்​கழக சிண்​டிகேட் பரிந்​துரை செய்​துள்​ள​து.

அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்த​ராக பேராசிரியர் ஆர்​.வேல்​ராஜ் பணி​யாற்​றிய காலத்​தில் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கிய​தில் முறை​கேடு நடந்​திருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இந்​நிலை​யில், அவரது பதவிக்​காலம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி முடிவடைய இருந்த நேரத்​தில் ஒரு நாளுக்கு முன்​பாக தமிழ்நாடு அரசு அவரை இடைநீக்கம் செய்தது.

இந்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வேல்​ராஜ் ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யிடம் மேல்​முறை​யீடு செய்​தார். இந்​நிலை​யில், அவர் மீது எடுக்​கப்​பட்ட இடைநீக்க உத்​தரவை ஆளுநர் ஆர்​.என்​.ரவி ரத்​துசெய்ததுடன் அவரது ஓய்​வுக்​கால பணப்​பலன்​களை வழங்​க​வும் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக சிண்​டிகேட் கூட்​டம் நேற்று முன்​தினம் (18.10.2025) நடந்​தது. இதில் பல்​கலைக்​கழக நிர்​வாகத்தை கவனித்து வரும் உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்​கர் தலை​மையி​லான கன்​வீனர் குழு​வினர் மற்​றும் சிண்​டிகேட் உறுப்​பினர்​கள் கலந்​து​ கொண்​டனர். அப்​போது, மே​னாள் துணைவேந்​தர் வேல்​ராஜ் மீதான இடைநீக்க உத்​தரவை ரத்​துசெய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை நிராகரிக்க வேண்​டும் என்று சிண்​டிகேட் உறுப்​பினர்​கள் பரிந்​துரை செய்​தனர்.

மேலும், தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களில் போலி பேரா சிரியர் நியமன விவ​காரம் தொடர்​பாக தமிழ்நாடு அரசு அமைத்த விசா​ரணைக்​குழு தனது அறிக்​கையை சிண்​டிகேட் கூட்​டத்​தில் சமர்ப்​பித்​தது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *