ஏழுமலையானுக்கு பட்டை நாமமோ! பக்தர்களிடம் இடைத்தரகர் ரூபாய் நாலு லட்சம் மோசடி

1 Min Read

அய்தராபாத், அக்.19 தெலங்கானாவை சேர்ந்த சில பக்தர்கள் தங்களுக்கு திருப்பதி எழுமலையான் கோயில் ஆர்ஜித சேவைகளும், திருமலையில் தங்க சொகுசு பங்களாவும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என இடைத்தரகர் ஒருவரை அணுகியுள்ளனர். அவர், இதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என கூறியுள்ளார்.

இதையடுத்து மொத்த தொகை யையும் தெலங்கானா பக்தர்கள் கைப்பேசி மூலம் அனுப்பி உள்ளனர். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட பிறகு அந்த இடைத்தரகர் தனது கைப்பேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பக்தர்கள் திருமலை 2-ஆவது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தலை மறைவான இடைத்தரகரை தேடி வருகின்றனர். இது போன்ற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு திருமலை காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *