புதுடில்லி, அக்.12 பெண் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டபூர்வ உத்த ரவாதங்கள் இருந்தாலும், அந்த உரி மைகள் அவர்களுக்கு மறுக்கப்படு வதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் நேற்று (11.10.2025) பேசியதாவது:
ஆழமாக வேரூன்றியுள்ள ஆணாதிக்க முறை!
சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆணாதிக்க முறையானது பெண்களுக்குரிய இடம் கிடைப்பதைத் தடுக்கிறது. இதை அனைவரும் முறியடிக்க வேண்டும். தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், புதிய கண்டுபிடிப்புகள் முன்னேற் றத்தை எடுத்துரைக்கின்றன. தொழில்நுட்பம் மூலம் ஒன்றைச் செய்வதற்கான அதிகாரம் கிடைக்கிறது. அதேநேரம் இணையவழியில் துன்புறுத்தல், அனுமதியின்றி பின்தொடர்தல், தனிநபா் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துதல், ஒருவரின் ஒளிப்படம் அல்லது காணொலியில் வேறொருவரின் முகத்தை சோ்த்து தவறாகச் சித்தரித்தல் போன்ற அபாயங்கள், தொழில்நுட்பத்தால் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்டு உள்ளது.
தனது பாலியல் தேவைக்காக இணையவழியில் பெண்களைத் தவறாக அணுகுதல், அவா்களை இணையவழியில் துன்புறுத்துதல், ஆள்கடத்தலுக்கு எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தடுப்பதற்கான சட்டங்களைத் திறம்பட அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக கல்வி மற்றும் விழிப்புணர்வு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண் குழந்தைகளின் வருங்காலத்தைப் பாதுகாப்பதே…
நாட்டில் பெண் குழந்தைக ளுக்கான அடிப்படை உரிமை களுக்கு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டபூர்வ உத்தர வாதம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த உரிமைகள் அவா்களுக்கு மறுக்கப்படுகிறது. வகுப்பறைகள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண் குழந்தைகளின் வருங்காலத்தைப் பாதுகாப்பதே அவர்களைப் பாது காப்பதற்கு உண்மையான அர்த்தம் என்று குறிப்பிட்டார்.