கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.10.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 12,480 கிராமங்களில் இன்று கிராம சபைக் கூட்டம்/ தெரு, சாலைகளில் ஜாதி பெயர் நீக்குவது தொடர்பாக தீர்மானம்: காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கடந்த ஆறு மாதங்களாக ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்குவதாக கூறி வெற்றி பெறாமல் இருந்த பழனிசாமி, தற்போது, த.வெ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்த முடியுமா? என வாய்ப்பு தேடுகிறார்.

      தி இந்து:

* கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதற்கு நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே காரணம் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை சிறந்த அய்பிஎஸ் அதிகாரியான அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்அய்டியே தொடரலாம் என்றும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வழக்கை சிபிஅய்க்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் வாதிட்டார்.

தி டெலிகிராப்:

* இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களில் சமூக நீதி புறக்கணிக்கப்படுமா? என்ற கவலையை டில்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள் வெளிப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *