32 ஆண்டுகள் போராட்டத்திற்கு வெற்றி சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த தொழிலாளிக்கு அரசு வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, மே 21- சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த மண்பாண்ட கூலித் தொழிலாளிக்கு 32 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளராக வேலை வழங்கப்பட்டுள்ளது. 

சேலம் அழகு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி பி.எஸ்.லோகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘எனக்குத் திருமணமாகி, ஒரு மகனும், மகளும் உள்ளனர். எனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.சேலத்தில் உருக் காலை அமைப்பதற்காக, எங்க ளுக்கு சொந்தமான 4 ஏக்கர் 80 சென்ட் நிலம் கடந்த 1991-ஆம் ஆண்டு அரசால் கையகப்படுத்தப் பட்டது. அப்போது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப் படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 

ஆனால், பல ஆண்டுகள் கழிந் தும் சேலம் இரும்பாலை நிறுவனத் தில் எனக்கு அரசு வேலை வழங் கப்படவில்லை. இது தொடர்பாக நான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அற நிலையத் துறையில் வேலை வழங்கு மாறு கடந்த 2019ஆ-ம் ஆண்டு உத்தர விட்டது. ஆனால், சேலம் மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக காவலாளி வேலை வழங்கப்படும் என்று கூறி ஆணையிட்டுள்ளார். ஏற்கெனவே எங்களது 4 ஏக்கர் 80 சென்ட் நிலம் தற்போது சேலம் உருக்காலைக்கு வெளியே, உப யோகப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, எனக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும். அல்லது எங்களது நிலத்தை திருப்பி ஒப் படைக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந் திரன் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. அப்போது மனு தாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் எம்.பிரபாவதி, எம்.தமிழவேல் ஆகியோர் ஆஜராகி, “ஏழ்மை நிலையில் உள்ள மனுதாரர் தனது நிலத்தை வழங்கிவிட்டு, அரசு வேலைக்காக கடந்த 32 ஆண்டு களாக சட்ட ரீதியாகப் போராடி வருகிறார்” என வாதிட்டனர். நீதி பதியும், அரசு வேலை வழங்காவிட் டால், நீதிமன்ற அவமதிப்பு நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 

இதையடுத்து, மனு தாரருக்கு சேலம் அறநிலையத் துறையில் அலுவலக உதவியாள ராக வேலை வழங்கப்படும் என்று அரசுத் தரப் பில் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஆணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *