மியான்மரில் ராணுவக் கட்சியின் கொடூரம் திருவிழா கூட்டத்தில் குண்டு வீசி தாக்குதல்

நேபிடாவ், அக்.9-  மியான்மரில் 2021ஆம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. நாட்டின் அதிபராக இருந்த ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேவேளை, ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கிளர்ச்சிக்குழுக்கள் போராடி வருகின்றன. அந்த குழுக்கள் நகரின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

இந்நிலையில், அந்நாட்டின் சஹாயிங் மாகாணம் மவ்யா மாவட்டம் சாங்-யூ நகரம் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதியில் கடந்த 6.10.2025 அன்று இரவு  புத்தமத முக்கிய விழாவான தடிங்யட் முழு நிலவு விழா கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மத வழிபாடு செய்தனர்.

அப்போது, மத நிகழ்ச்சிக்காக கூடியிருந்தவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பாராகிளைடர், பாராசூட்டில் வந்த ராணுவத்தினர் கூடியிருந்தவர்கள் மீது குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *