இணைய வழி சூதாட்டத்திற்கு முடிவு; ‘வாரண்ட்’ இல்லாமல் கைது செய்ய அதிகாரம் புதிய விதிகள் குறித்து கருத்துக் கேட்பு

1 Min Read

புதுடில்லி, அக.6 –  இணைய வழி (ஆன் லைன்) சூதாட்ட விளை யாட்டுகளுக்கு தடை விதித்து, வாரண்ட் இன்றி கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட கடுமையான விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘இணைய வழி’ விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை வரைவு விதிகள், 2025’-அய் வெளியிட்டுள்ளது. இதன்படி, பணம் அல்லது பணமாக மாற்றக்கூடிய வெற்றிகளை வழங்கும் அனைத்து இணைய வழி விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதில், ரம்மி, ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் போன்ற திறமை அடிப்படையிலான விளையாட்டுகளும் அடங்கும்.

இந்த புதிய விதி களின்படி, தடையை மீறுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை யிலும், அவற்றை விளம்பரப்படுத் துபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனையும், முறையே 1 கோடி ரூபாய் மற்றும் 50 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். குற்றம் நடப்பதாக சந்தேகம் எழுந்தால், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் வாரன்ட் இன்றி சோதனையிடவும், கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முக் கிய குற்றங்கள் பிணையில் வெளிவர முடியாதவையாக வகைப்படுத்தப்ப ட்டுள்ளன.

இந்த வரைவு விதிகள் மீது பொதுமக்கள் அக்டோபர் 31ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *