சிவகங்கை மாவட்டம் – சாலைகிராமத்தில் தந்தை பெரியார் 147-ஆவது பிறந்தநாள் விழா

1 Min Read

சாலைகிராமம், அக். 1- சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தில்16.9.2025 அன்று மாலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, அறிவாசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா எழுச்சியோடு நடைபெற்றது. காரைக்குடி மாநகரக்கழக துணைத்தலைவர் ஆ.பழனிவேல்ராசன் வரவேற்புரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், கழக காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி, இளையான்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆறு.செல்வராசன், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வே.தமிழ்மாறன் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கா.வெங்கட்ராமன், இளையான்குடி விசிக ஒன்றிய செயலாளர் ஜேம்ஸ் வளவன் வழக்குரைஞர் சேவியர் ஆகியோர் உரையாற்றிய பின் கழக பேச்சாளர் பெரியார்செல்வன் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அருந்தொண்டாலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஒப்பற்ற பேருழைப்பாலும் திராவிட இனமக்கள் பெற்றிருக்கும் உயர்வினை எடுத்துக்காட்டி எழுச்சியுரையாற்றினார்.

ஒன்றிய திமுக அயலக அணி துணைஅமைப்பாளர் சேதுசெகதீசன் அன்னையார் சே.பழனியம்மாள் படத்தினை திறந்து வைத்து தமிழ்நாடு மேனாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற திமுக உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் தனது உரையில், தந்தை பெரியார் உழைப்பு தான் இன்று ஒவ்வொரு துறைகளிலும் உயர்ந்து ஒளிர்கிறார்கள். தந்தை பெரியாரின் கொள்கை வழி நின்று திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டு சிறப்புரையாற்றினார்.இறுதியில் ஒன்றிய கழக தலைவர் பவனிவட்டன் நன்றி கூறினார். நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மா.சுந்தர்ராசன், காரைக்குடி மாநகர செயலாளர் அ.பிரவீன், தி.தொ.க. மாவட்டத்தலைவர் சி. சூரியமூர்த்தி,  தி.க.பாலு, செ.குணசேகரன்,தினகரன் முரளி ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *